Rock Fort Times
Online News

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு…!

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவருடைய ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவர் அமைச்சராகவே உள்ளதால், ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத் துறை வாதிட்டது. இதனையடுத்து ஜாமீன் மீதான விசாரணைக்கு ஒரு நாள் முன்னதாகவே அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து 3 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. கடந்த பிப்ரவரியில் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து 3 மாதங்களில் விசாரணையை முடிக்குமாறு உத்தரவிட்டது.
ஆனால், இதுவரை முடிக்காத பட்சத்தில் இன்று(26-06-2024) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. செந்தில்பாலாஜி மீதான வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் அடுத்த 4 மாதங்களுக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படாது என்று தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்