Rock Fort Times
Online News

திருச்சியில் சமத்துவ பொங்கல் விழா- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு…

திருச்சி மாநகராட்சி 36-வது வார்டு பகுதியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கார்த்திக் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், சிறப்பு விருந்தினராக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பொது மக்களுக்கு பொங்கல் வழங்கியதுடன், அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

முன்னதாக, அமைச்சருக்கு ஐங்கரன் கலைக்கூடத்தை சேர்ந்த சிலம்ப மாணவ மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
விழாவில், வட்ட செயலாளர்கள் ஆனந்த், சுரேஷ் மற்றும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் வழங்கினார். இந்த விழாவில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெயராமன், திருச்சி கிழக்கு தாசில்தார் குணசேகரன், கூட்டுறவு சார்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் சகிபுல்லா, அமராவதி மேலாளர் கபிலன் மற்றும் அரசு அதிகாரிகள் , கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்