திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் லூதர் (வயது 56). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த இவர் கம்பெனி பணம் 15 ஆயிரத்தை கையாடல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் சம்பவத்தன்று உறையூர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் மின்விசிறியில் பெட்சீட்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி மொரின் அஞ்சலா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.