மின்வாரியத்தில் 60,000 காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை புகுத்த கூடாது. கேங்மேன் பதவியை கள உதவியாளர் பதவியாக மாற்றிட வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வட்ட தலைவர் நடராஜன் தலைமையில் இன்று(25-02-2025) தர்ணா போராட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் ரங்கராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சிஐடியு மாவட்ட தலைவர் சீனிவாசன் நிறைவுறையாற்றினார். முடிவில் கிழக்கு கோட்ட செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார் .இந்த போராட்டத்தில் பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், பகுதிநேர ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.