திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் தங்களது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது திருச்சி பாலக்கரை, ஸ்ரீரங்கம், ரெட்டமலை, ராம்ஜி நகர், மில் காலனி பகுதிகளில் கஞ்சா விற்றதாக முகமது அலியார், ஜெய்சங்கர், விஜயகுமார், சுகுமார் மனைவி கங்காதேவி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. முகமது அலியார், ஜெய்சங்கர் ஆகியோரிடம் இருந்து ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல திருவானைக்காவல் சப்-இன்ஸ்பெக்டர் நல்லதம்பி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக அருண் முத்து, பிரசன்னா ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி பாலக்கரை போலீஸ் சரகம் முதலியார்சத்திரம் கெம்ஸ்டவுண் ரேஷன் கடை அருகில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்திய போது போதை மாத்திரைகள் விற்றதாக பிரின்ஸ், ஆரிஃப்கான், சையது முஸ்தபா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆல்பின், அல்லா பிச்சை ஆகிய இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments are closed.