Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்காதே…மத்திய அரசை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் திமுக மாணவரணி, தமிழ்நாடு மாணவர் இயக்க கூட்டமைப்பு சார்பில் இன்று(25-02-2025) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பிஎம்.ஆனந்த் தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர கழக செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஈஞ்சூர் சதீஷ், துணை அமைப்பாளர் அப்துல்காதர், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், காஜாமலை விஜய், நாகராஜன், கமால் முஸ்தபா, மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் முள்ளிபட்டி எம்.பால்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத், வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு, பந்தல் ராமு, வட்ட செயலாளர் தனசேகர், சிந்தாமணி பாலமுருகன், சர்ச்சில், கிங், ராம்ஜி குணா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்