Rock Fort Times
Online News

திருச்சியில் காதல் தோல்வியால் டாக்டர் தற்கொலை…!

திருச்சி தீரன்நகர் விஜயா நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த பழனிசாமியின் மகன் கவுதம் (26). இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் அண்மையில் வயிற்று வலி எனக்கூறி அவர் வேலை செய்யும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், கடந்த 21-ம் தேதி கவுதமுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக மீண்டும் அதே மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் கவுதம் மருத்துவம் படித்தபோது அவருடன் படித்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் மன அழுத்தத்தில் அவர் வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்