Rock Fort Times
Online News

தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் வாக்களிக்கவில்லையா? இன்னொரு சான்ஸ் தந்தது தேர்தல் ஆணையம்

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தபால் வாக்களிக்க தவறியிருந்தால், ஏப்ரல் 15 ஆம் தேதி திங்கள்கிழமை வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் காவல்துறை மற்றும் அரசு அலுவலர்கள் ஏப்ரல் 12, மற்றும் 13ம் தேதிகளில் அஞ்சல் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இரு நாள்களிலும் அஞ்சல் வாக்கு பெற்று, வாக்களிக்க தவறியவர்கள் நாளை (ஏப்ரல் 15ம் தேதி) வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரக குறைதீர் முகாம் கூட்டரங்கில், அஞ்சல் வாக்குகளை பதிவு செய்யலாம். இத்தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்