முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை ஒரு ஆண்டு கொண்டாட முடிவு…
மத்திய மாவட்ட திமு.க.செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி தில்லை நகரில் உள்ள முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையிலும், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர், மேயர் அன்பழகன் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருகிற 3-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை மத்திய மாவட்டம் முழுவதும் கட்சி கொடி ஏற்றியும், கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.பரணிக்குமார், துணைச் செயலாளர்கள் விஜயா ஜெயராஜ், முத்து செல்வம், சேர்மன் துரைராஜ், ஒன்றியச்செயலாளர்கள் கதிர்வேல், மாத்தூர் கருப்பையா, பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ, ராம்குமார், நாகராஜன், கமால் முஸ்தபா, கனகராஜ், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, தில்லைநகர் கண்ணன், இளைஞரணி ஆனந்த், பி.ஆர்.சிங்காரம், டோல்கேட் சுப்பிரமணி, , டாக்டர் சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா மற்றும் கவுன்சிலர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர் புத்தூர் தர்மராஜ், அயூப் கான், கிராப்பட்டி செல்வம், சர்ச்சில், தொ.மு.ச.குணசேகரன்,மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.