திருச்சி சிபிசிஐடி (ஓசியு) பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் கார்த்திகேயன். இவர் இன்று காலை பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அவரது சொந்த ஊரான காவல்கார பாளையம் வள்ளுவர் நகரில் உள்ள வீட்டில் பராமரிப்பு வேலைகளை மேற்பார்வையிட்டு வந்துள்ளார். அப்போது ,கட்டடத்தின் சிமெண்ட் பூச்சுக்கு தண்ணீர் விடும் பொழுது எதிர்பாராத விதமாக காவலர் கார்த்திகேயனை மின்சாரம் தாக்கியது.அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த கார்த்திகேயன், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். சம்பவம் குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.