தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சரண்யா. தற்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இவரது கணவர் பொன்வண்ணன்.
சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஸ்ரீதேவி என்பவருக்கும் சரண்யாவுக்கும் கார்கள் உரசி கொண்டது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சரண்யா, ஸ்ரீதேவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண், சரண்யா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சரண்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.