Rock Fort Times
Online News

திருச்சி காவிரி பாலத்தில் கார் மோதி விபத்து – 2 வாலிபர்கள் பலி !

திருச்சி,ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியைச் சேர்ந்தவர் வரதராஜன்.இவரது மகன் சாரநாத் (வயது 23). ஸ்ரீரங்கம் சாத்தார வீதியைச் சேர்ந்தவர் நம்மாழ்வார் .இவரது மகன் கோகுல்நாத் (22).இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி நோக்கி காவேரி பாலம் வழியாக வந்து கொண்டிருந்தனர்.அப்போது எதிர் திசையில் வந்த கார், இவர்கள் மீது பயங்கரமாக மோதியது.இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவ்வாலிபர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்