மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம், விவசாய சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, 50-க்கும் மேற்பட்டோர் தலைமை தபால் நிலையம் முன்பு குவிந்தனர். இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் லெனின், மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கனல் கண்ணன், எஸ்.எப்.ஐ மாவட்ட தலைவர் சூர்யா, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் தங்கதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு தலைமை தபால் நிலையத்தை முற்றுகை இட முயன்றனர் . அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 20 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.