திருச்சி புத்தூர் மேல வண்ணாரப்பேட்டை திடீர் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 23). பிரபல ரவுடி. இவர் தனது நண்பனின் இருசக்கர வாகனம் திருட்டு போனது குறித்து ஒருவரிடம் விசாரித்துள்ளார். அப்போது அங்கு வந்த மேல வண்ணாரபேட்டையை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் நீ எப்படி என் சகோதரன் மீது சந்தேகபட்டு விசாரிக்கலாம் என்று கேட்டுள்ளார். இதில், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வெள்ளைச்சாமியின் சகோதரரும், மற்றொரு ரவுடியுமான பிரபு, அவரது மனைவி செல்வி ஆகியோர் அங்கு வந்து தட்டி கேட்டுள்ளனர். அப்போது செல்வி, ரவுடி சதீஷ்குமார் மீது மிளகாய் பொடியை தூவ, பிரபு உருட்டு கட்டையால் தாக்கினாராம். வெள்ளைச்சாமி பிளேடால் சதீஷ்குமாரை கிழித்துள்ளார். இதில் காயமடைந்த சதீஷ்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளைச்சாமி மற்றும் ரவுடி பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். செல்வியை தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.