வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழ சின்னத்தில் இந்திய புலிகள் ஜனநாயக கட்சி தலைவர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.
அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று(17-04-2024) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் இறுதிகட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வந்தார். இன்று காலை முதல் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்து விட்டு குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.