தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் கிராமப்புற மாணவ- மாணவிகளை பின்னுக்கு தள்ளி நகர்ப்புற மாணவ- மாணவிகள் சாதனை படைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கிராமப்புற மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் இன்று எட்டரை பகுதி முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் சீருடை பணியாளர்கள் சார்பில் கிராமப்புற பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட எட்டரை கிராமத்தில் நடைபெற்றது. ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிதாசன், ரயில்வே கமாண்டண்ட் ஆனந்தன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முன்னாள் துணை இயக்குனர் கலைசெல்வன் ஆகியோர் மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே நடத்தப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓட்டினர். அவர்களை கிராம மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதில், முதல் 3 இடங்களை பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு தலா 4,000, 3000, 2000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.