Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…!

தமிழக நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரம் திட்டத்தின் கீழ் நடைபெறும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (09.06.2023) தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார். அதற்காக இன்று இரவு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை நகர்ப்புறத்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி தலைமையில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மெய்யநாதன், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார்,போலீஸ் கமிஷனர் சத்யபிரியா,மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன், டி.ஐ.ஜி சரவண சுந்தர்,திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

 

 

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, கதிரவன்,சௌந்திர பாண்டியன்,ஸ்டாலின் குமார்,திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி துணை மேயர் திவ்யா அரசு அதிகாரிகள் மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள்,தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்