பெரம்பலூர் அரணாரை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற அப்துல்ரகுமான் (வயது 40). திரைப்பட இயக்குனரான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இதன் காரணமாக ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்த இவர், கடந்த 5-ந் தேதி தனது பிறந்தநாளையொட்டி பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் மதுபான கூடத்தில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், செல்வராஜை வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் திருவள்ளூர் நகரை சேர்ந்த ராஜன் மகன் சரவணன் (22) என்பவர் நேற்று முன்தினம் திருச்சி 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
மேலும், பெரம்பலூர் வரகுபாடியை சேர்ந்த செல்வராஜ் மகன் தன்ராஜ்(31) நேற்று காலை திருச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு, அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.