Rock Fort Times
Online News

ஒன்றரை மணி நேரம் விசாரணைக்கு பிறகு உதயநிதி விடுவிப்பு – தொண்டர்கள் ஆரவாரம்…! 

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில், முதல்வர் விஜய் குறித்த அவரது இரட்டை அர்த்தப் பேச்சு சர்ச்சையானதை அடுத்து, இன்று (ஆக.4) காலை தஞ்சாவூர் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். சென்னை – நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தஞ்சாவூருக்கு காவல் துறை வாகனம் மூலம் உதயநிதியை விசாரணைக்காக காவல் துறையினர் அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள் திரண்டு வந்து காவல் துறை வாகனத்தை மறித்தனர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலை 6.45 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு விசாரணை நடைபெற்ற நிலையில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது காவல் நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்து, ஆரவாரம் செய்தனர். பின்னர் அவர் காரில் சென்னை புறப்பட்டு சென்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்