Rock Fort Times
Online News

சீரான மின்சாரமில்லை : பொதுமக்கள் சாலை மறியல் !

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் கடந்த 3 நாட்களாக சீரான மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கீழ வயலூர் பகுதியில் உள்ள மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த 3 நாள்களாக சுற்றுப்பகுதியில் மின் விநியோகம் சீராக இல்லை. எனவே குடிநீர் தொட்டிகளுக்கு நீர் உந்தமுடியவில்லை. மேலும் மாற்று ஏற்பாடுகளும் முறையாக மேற்கொள்ளாததால் அடிப்படைத் தேவைகளுக்காக பொதுமக்கள் அவதிக்குள்ளாக நேர்ந்துள்ளது. இது தொடர்பாக மின் வாரியத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த கீழ வயலூர் மக்கள் சோமரசம்பேட்டை எம்ஜிஆர் சிலை அருகே நேற்று          ( 26.04.2023 ) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார், மின் உதவியாளர் ஞானம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்