திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வாகனம் மோதியதில் பெண் பலி…!
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செல்கின்றனர். மாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை தரிசனம் செய்வதற்காக பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அந்தவகையில் திருச்சி வளநாடு பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து சமயபுரம் கோவில் நோக்கி பாதயாத்திரை சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் எதிரே நடந்து சென்றபோது அவர்கள் பின்னால் வந்த ஏதோ ஒரு வாகனம் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் கீழப்பளுவஞ்சியை சேர்ந்த வெள்ளையம்மாள் (50) என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த செல்லம்மாள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சில பக்தர்கள் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிந்து பக்தர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? அதனை ஓட்டி சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.