ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற 11.04.2023-ஆம் தேதி முதல் 21.04.2023 -ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஸ்ரீ நம்பெருமாள் விருப்பன் ( சித்திரை தேர்) திருநாளில் திருத்தேருக்கு ஸ்தம்ப ஸ்தாபனம் (முகூர்த்த கால்நடுதல் ) நிகழ்ச்சி இன்று பங்குனி மாதம் -27 ஆம் தேதி (10.04.2023) திங்கட்கிழமை பஞ்சமி திதி அனுஷம் நட்சத்திரம் சுபயோகம் கூடிய சுப தினத்தில் காலை 10.00 மணியிலிருந்து 10.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது , இந்நிகழ்வில் கண்காணிப்பாளர்கள் கோபல கிருஷ்ணன் , சரண்யா ,வெங்கடேசன் , உதவி கண்காணிப்பாளர் மோகன் , மணியக்காரர் ஸ்ரீதர் , நிலப்பிரிவு பாலசுப்பிரமணியன் , கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் .

