பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதை முன்னிட்டு ஜனவரி 3-ம் தேதி மற்றும் 10-ம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும்…!
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ஜனவரி 3 மற்றும் 10-ம் தேதிகளில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இருக்கும் என்று தமிழ்நாடு அரசு உணவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும். அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வேலை நாள். பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஜனவரி 3 மற்றும் 10ம் தேதி ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்ய ஜன., 15, பிப்., 22ம் தேதி விடுமுறை நாளாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.