மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.இந்த நிலையில், கடந்த 5 மாதங்களாக ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், ஆண்டின் முதல் நாளான இன்று(01-01-2025) விலை குறைந்துள்ளது. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.1,966-க்கு விற்பனையாகிறது. மும்பையில் ரூ.1,756.50-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,912.50 ஆகவும், புதுடெல்லியில் ரூ. 1803.50 ஆகவும் விற்பனையாகிறது. அதேவேளையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களின் விலை மாற்றப்படவில்லை.
Comments are closed.