தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 31). இவர், திருச்சி கண்டோன்மென்ட் மகளிர் காவல் நிலைய போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த 29ந்தேதி முகமது உசேன் தன்னை பொது வார்டுக்கு மாற்ற கோரி சிறை வார்டன் மற்றும் பணியாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் முகமது உசேன் பேண்ட் நாடாவை கழற்றி அதில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறை வார்டன் அவரை தற்கொலை சம்பவத்திலிருந்து மீட்டார் . இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கேகே நகர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், ஆயுள் தண்டனை கைதி முகமது உசேன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.