பெரியாரின் 51வது நினைவுநாள் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!
பெரியாரின் 51 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் கே.வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் மு.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி , மாவட்ட துணைச் செயலாளர்கள் டி.முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், கோ ட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் ,துர்கா தேவி சேர்மன் துரைராஜ், டோல்கேட் சுப்பிரமணி , தொமுச மாநில செயலாளர் குணசேகர், குடமுருட்டி சேகர், லால்குடி நகர செயலாளர் துரை மாணிக்கம், ஒன்றியச்செயலாளர் கதிர்வேல், பகுதிச்செயலாளர்கள்மோகன்தாஸ், இளங்கோ, நாகராஜ், ராம்குமார்,மற்றும் கனகராஜ் கலைச்செல்வி,ஆர்.பாலசுப்பிரமணியன் புஷ்பராஜ், கருணாமூர்த்தி தஸ்தா, சர்ச்சில் மாணிக்கம் மதனா,கருமண்டபம் சுரேஷ், பரமசிவம், கதிரேசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
Comments are closed.