Rock Fort Times
Online News

திருச்சியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் சிக்கினர்…!

திருச்சி, கருமண்டபம் மாந்தோப்பு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தபோது இரண்டு பேர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் கருமண்டபம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 47), தினேஷ் குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். இதேபோன்று கருமண்டபம் மாரியம்மன் கோவில் அருகில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற கருமண்டபம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெளி மாநில லாட்டரி நம்பர் எழுதப்பட்ட பேப்பர் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்