நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் 4-வது நாளான (ஜூலை 23) இன்றும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகிய பிறகே விவாதத்தில் பங்கேற்போம் என்று எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்ததால், அவை நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. கடந்த மூன்று நாள்களாகவும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.