தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஒரு சிலர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கி விற்று வருகின்றனர். குறிப்பாக திருச்சி மாநகரில் கஞ்சா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. கண்டோன்மென்ட் காந்தி மார்க்கெட், உறையூர், கோட்டை பகுதிகளில் அதிக அளவு லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் அந்தந்த சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர். அப்போது லாட்டரி விற்றதாக பிரபல ரவுடி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள் மற்றும் கட்டு, கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களும் சிக்கியது. இந்த வழக்கு தொடர்பாக முக்கிய புள்ளி ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments are closed.