Rock Fort Times
Online News

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்…!

தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 47- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 47 நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மூன்றாவது நிகழ்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மூத்த திமுக உறுப்பினர்களுக்கு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் விழா இன்று(07-12-2024) மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அண்ணாநகர் அ.வெங்கடேஷ்குமார், திருச்சி கிழக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் ரா.முத்து தீபக் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றினர். இதில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், மண்டல தலைவருமான மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் ஆகியோர் பேசினர். இளைஞர் அணி துணை அமைப்பாளர்களான குண்டூர் பாலமுருகன், பி.ரவீந்திரன், எம்.தேசிங்குராஜா ஐ.பெர்னாட், சாமிநாதன், பி.விஷ்ணுவர்தன், சையத் சாகிப், ஆர்.அல்லாபிச்சை, எம்.ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மலைக்கோட்டை பகுதி செயலாளர் மருந்து கடை ஆர்.மோகன், 11வது வார்டு கவுன்சிலர் கே.பன்னீர்செல்வம், 12வது வட்டக் கழக செயலாளர் வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கே.எம்.கண்ணன் வரவேற்புரையாற்றினார். முடிவில் எஸ். சரத்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்