Rock Fort Times
Online News

20 ஆண்டுகள் பணி முடித்த நகர சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு- சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்…!

தமிழ்நாடு உள்ளாட்சி நகர சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் உரிமைக்காக ஒன்றுபடுவோம் என்ற கருத்தரங்கம் திருச்சியில் இன்று(01-12-2024) நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் லெ.விஜயலட்சுமி தலைமை தாங்கினார். திருச்சி மாநகராட்சி நகர சுகாதார செவிலியர் சங்க தலைவர் இந்திரா வரவேற்றார். தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குரல் படிப்பாசிரியர் இரா. சீதாராமன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். இதில், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாநகராட்சி உதவி ஆணையர் சங்க மாநில தலைவர் சண்முகம், அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் சுஜாத்அலி, திருச்சி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் நகராட்சி மற்றும் மாநகராட்சி நகர சுகாதார செவிலியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு உள்ளாட்சி நகர சுகாதார செவிலியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மேரி ரோஸ்லின் நன்றி கூறினார். கூட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி பொறியாளர்களுக்கு பதவி உயர்வில் வழங்கப்படும் சலுகை பெண் பணியாளர்களுக்கான நகர சுகாதார செவிலியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 20 ஆண்டுகள் பணி முடித்த நகர சுகாதார செவிலியர்களுக்கு பகுதி சுகாதார செவிலியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் தமிழ்நாடு உள்ளாட்சி நகர சுகாதார செவிலியர் சங்க மாநில துணைத் தலைவர் மேரி ரோஸ்லின் நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்