Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல்- ரூ.5 ஆயிரத்திற்காக கடத்தி வந்த பெண் சிக்கினார்…!

கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு  ஏர் ஏசியா விமானம் ஒன்று வந்தடைந்தது.  அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது பெண் ஒருவர் தனது  உடையில் மறைத்து தங்க சங்கிலிகளை  கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து  ரூ.27 லட்சத்து  14 ஆயிரத்து 225 மதிப்புள்ள 359.500 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனர்.  பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.  விசாரணையில், அந்த பெண் கோலாலம்பூர் விமான நிலையத்திற்குள் நுழையும் பொழுது அங்கு இருந்த நபர் ஒருவர் இந்த தங்க சங்கிலிகளை திருச்சியில் கொண்டு போய் கொடுத்து  விடுங்கள். அதற்காக ரூ.5 ஆயிரம் தருவதாக கூறியதன் பேரில் இந்த தங்கச் சங்கிலிகளை எடுத்து வந்ததாக தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் தங்க சங்கிலிகளை கொடுத்து அனுப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்