Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த இருவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. பண மோசடி, போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் சீனாவை சேர்ந்த இருவர் ஆன்லைனில் பணம் மோசடி செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இன்று(14-11-2024) காலை சிறப்பு முகாமிற்கு வந்த ஐந்து பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமில் உள்ள சீனாவை சேர்ந்த இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மோசடி மற்றும் அன்னிய  செலாவணி மோசடி தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருவரிடமும் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சிறப்பு முகாமில் கடந்த 2022ம் ஆண்டு போதை பொருள் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் தொடர்பாக என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். இந்த நிலையில் மீண்டும் சிறப்பு முகாமில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்