Rock Fort Times
Online News

காதலுக்கு எதிர்ப்பு: காதலியின் தந்தை, மகளை வீடு புகுந்து தாக்கிய 2 ரவுடிகள் கைது…!

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் ஆர்.எம்.எஸ்.காலனி 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு காவியா, கோகிலா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். காவியா ஆர்.எம்.எஸ்.காலனி ஐந்தாவது தெரு பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்வகுமார் ( 26)என்பவரை காதலித்தார். இதை அறிந்த கனகராஜ் மகளை கண்டித்தார். இதுகுறித்து காவியா தனது காதலனுக்கு தகவல் கொடுத்தார். உடனே, செல்வகுமார் தனது தாயாருடன் வந்து காவியாவை அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் செல்வகுமார் மற்றும் அவரது நண்பர் ரவுடி அந்தோணி (28 )ஆகிய இருவரும் கனகராஜ் வீட்டுக்கு மீண்டும்
சென்று அவரிடம் தகராறு செய்து தாக்கினர். அப்போது தந்தையை காப்பாற்ற வந்த அவரது இளைய மகள் கோகிலாவுக்கும் அடி விழுந்தது. இதில் அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தந்தை, மகள் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடிகள் செல்வகுமார்,
அந்தோணி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்