திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பழனிமலை மகன் கிருஷ்ணமூர்ததி (29). ஐ.டி.ஐ. படித்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விவசாயம் பார்த்து வந்தார். காட்டுப்புத்தூரை அடுத்த சீத்தப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். லாரி டிரைவர். இவரது மனைவி கீர்த்தனா.
5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கீர்த்தனா, தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும், கீர்த்தனாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் இரு தரப்பு வீட்டிற்கும் தெரியவந்தது. இதனால், அவமானம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, தான் விவசாயம் பார்த்து வந்த தோட்டத்தின் அருகிலுள்ள மோட்டார் அறையில் கீர்த்தனாவுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தொட்டியம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காட்டுப்புத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.