நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளரும்மான கே.என் .நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே.என் .ராமஜெயத்தின் 11 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள அமைச்சர் நேரு இல்லத்தில், ராமஜெயம் படத்திற்கு அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், சவுந்திர பாண்டியன்,காடுவெட்டி தியாகராஜன் ஸ்டாலின் குமாா்,பழநியாண்டி ,திமுக முன்னணி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் உள்ள ராமஜெயம் சிலை இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த சிலையின் பீடத்தில் ராமஜெயம் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கும், அந்த புகைப்படத்திற்கும் அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன், மகன் அருண் நேரு, திருச்சி மேயர் அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, திருச்சி மாவட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் பாஸ்கரன், அந்தநல்லுாா் ஒன்றிய திமுக செயலாளா் பி.கதிா்வேல்,நத்தம் பொியய்யா,பெருவை இ.ஆா்.எஸ் முருகவேல், பகுதி செயலாளா்கள் காஜாமலை விஜய், மோகன் தாஸ்,இளங்கோ,கண்ணன்,அந்தநல்லுாா் ஒன்றிய சேர்மன் துரைராஜ் மற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.