திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் மண்டலம் குழு 5-ன் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது. உதவி ஆணையர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, நிர்வாக அலுவலர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள், கே.எஸ்.நாகராஜன், கமால் முஸ்தபா, முத்துக்குமார், பைஸ் அகமது, ,சோபியா விமலா ராணி, நாகலட்சுமி ,பங்கஜம், மற்றும் தில்லைநகர் கண்ணன், உதவி வருவாய் அலுவலர் துரை,கண்காணிப்பாளர் புனிதவதி, இளநிலை பொறியாளர்கள் இப்ராகிம், ரமேஷ், சந்திரசேகர், ரவிக்குமார்,சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், யோகேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மண்டலம் ஐந்திற்கு உட்பட்ட வார்டுகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.