திருச்சி மாவட்டம், பெருகமணி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த கிருத்திகா அருண் குமார். இவர், தன்னுடைய அதிகாரம், பதவியை தவறாகப் பயன்படுத்தி, கிராம ஊராட்சிச் செயலர் கையொப்பத்தையும், ஊராட்சி துணைத் தலைவர் மணிமேகலை என்பவரது கையொப்பத்தையும் போலியாக போட்டு போலி சொத்து வரி ரசீது மற்றும் போலி அரசு முத்திரைகளை தயாரித்துப் பயன்படுத்தி மக்களிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பெருகமணி ஊராட்சியைச் சேர்ந்த ம.முத்துராஜன் என்பவர் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்ததால் முத்துராஜனுக்கு ஊராட்சித் தலைவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஸ்ரீரங்கம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முத்துராஜன் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் முடிவில், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பேட்டைவாய்த்தலை போலீஸார், பெருகமணி ஊராட்சி மன்றத் தலைவர் கிருத்திகா அருண்குமார் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Prev Post
Comments are closed.