Rock Fort Times
Online News

திருச்சியில் ரயில்வே தண்டவாளம் அருகே வீசப்பட்ட ஆண் சிசு மீட்பு-கல்நெஞ்சம் படைத்த தாய் குறித்து விசாரணை…!

திருச்சி கோட்டை தேவதானம் பூசாரி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் அம்மு (28), வளர்மதி (38). இருவரும் தேவதானம் பகுதியில் உள்ள தண்டவாளம் பகுதியில் பழைய பொருட்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தண்டவாளம் அருகே புதர்மறைவில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்தப் பெண்கள் அங்கு சென்று பார்த்தபோது துணியில் சுற்றிய நிலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் சிசு ஒன்று வீசப்பட்டு கிடந்தது. இதை கண்ட இருவரும் குழந்தையை மீட்டு கீழரண்சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்குள்ள மருத்துவ ஊழியர்கள், இது குறித்து சைல்டு லைன் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த சைல்டு லைன் அமைப்பினரிடம் போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக கோட்டை போலீசார் வழக்கு பதிந்து குழந்தையை தண்டவாள பகுதியில் வீசி சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரியான நேரத்தில் குழந்தையை மீட்ட அம்மு மற்றும் வளர்மதியை போலீசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்