Rock Fort Times
Online News

தரைக்கடைகள் அகற்றப்படுவதை கண்டித்து திருச்சியில் 12-ந் தேதி கடையடைப்பு…

திருச்சி சி.ஐ.டி.யூ. தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். சிஐடியூ மாநில குழு முடிவுகள் குறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வி, சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், திருச்சி மாநகர பகுதிகளில் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி வருபவர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி அரசு மருத்துவமனை, ஏர்போர்ட் போன்ற பகுதிகளில் கடை நடத்தக் கூடாது என்று விரட்டுகிறார்கள். இப்பகுதிகளில் வியாபாரம் செய்யும் அனைவரும் மாநகராட்சியில் அடையாள அட்டை பெற்றுள்ளார்கள். அதே நேரத்தில் மாமூல் வாங்கிக்கொண்டு புதிய  நபர்களை, புதிய இடங்களில்,  கடை நடத்த அனுமதிக்கிறார்கள். மத்திய அரசு சட்டப்படி, தரைக்கடை வியாபாரிகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். வெண்டிங் கமிட்டி அமைக்காமல், சம்பந்தப்பட்ட வியாபாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தாமல், மாற்று இடம் வழங்காமல், தரைக்கடைகளை அப்புறப்படுத்த கூடாது என்று  சட்டத்தில் உள்ளது. மேலும், மத்திய அரசின் சுவா திட்டத்தின் கீழ் தரைக்கடை வியாபாரிகளுக்கு ரூ.1,500 மானியத்துடன் ரூ.10,000 கடன் வழங்காமல் பல கோடி கடன் தொகையை ஏமாற்றி உள்ளார்கள். எனவே, தரைக் கடைகளை அப்புறப்படுத்தக்
கூடாது. தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் வருகிற 12ம் தேதி கடை அடைப்பு மற்றும் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் சுரேஷ், ஷேக் மொய்தீன், கோவிந்தன், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்