திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே கொடியாலம் காந்திநகர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் பொன்னர். இவரது மகன் கோகுல் . இவர் திருவெறும்பூர் அரசு ஐ.டி.ஐ.ல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இடையிடையே கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 25-ம் தேதி இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் வெளியே திண்ணையில் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் கோகுலின் கழுத்தை கத்தியால் அறுத்து படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான போலீசார் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் கொடியாலம் கிராமத்தைச் சேர்ந்த தேசிங்குராஜா( வயது 27), கமல்ராஜ்(21), மதிர்விஷ்ணு(19), மகேஷ்வர்மா(22), முத்து(22), ஜெய்ஆகாஷ்(22), ரஞ்சித்(22), தெற்கு புலிவலம் நித்தியானந்தம்(29) ஆகிய 8 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தேசிங்குராஜாவை கொலை செய்ய கோகுல் திட்டம் தீட்டியிருந்தாராம். இதையறிந்ததும் முன்கூட்டியே கோகுலை கொலை செய்ததாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 8 பேரையும் கைது செய்த போலீசார், கோகுலை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.