திருச்சி அருகே ரூ.31.45 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம்…
அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்...
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடி கிராமத்தில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ .31.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டி , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன் , துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு. சுப்பிரமணியன் , மணிகண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலம் கருப்பையா, வைரமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.