திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் ,பிரேம்குமார் ,விக்னேஷ், சதீஷ்குமார், சீனிவாசன் உள்ளிட்ட ஆறு பேர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுடன் வேலை பார்க்கும் லால்குடி பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் வீட்டின் கிரகப்பிரவேச விழாவிற்கு சென்று விட்டு 6 பேரும் கார் மூலமாக சென்னைக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டு இருந்தனர். அப்போது சமயபுரம் சுங்கச்சாவடி அருகே திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து காரை முந்தி சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக கார் மீது பேருந்து மோதியதில், கார் தலை கீழாக கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ஆறு தனியார் நிறுவன ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர் படுகாயம் அடைந்த ஆறு பேரையும் சமயபுரம் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.