Rock Fort Times
Online News

தொழிலில் நஷ்டம் : கால்நடை பண்ணை உரிமையாளர் தற்கொலை…

துறையூர் தேவரப்பம்பட்டி கள்ளிக்குடி பகுதியை சோ்ந்தவா் பாலு (50). இவா் பண்ணை அமைத்து ஏராளமான ஆடுகளை வளா்த்து வருகிறாா். சமீபத்தில் அவரது பண்ணையில் 200 ஆடுகள் இருந்த நிலையில் நோய்வாய்ப்பட்டு 180 ஆடுகள் அடுத்தடுத்து இறந்து விட்டது. இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மனம் உடைந்த பாலு பண்ணையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவா் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் வினோத் ஜம்புநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடை பண்ணையில் நஷ்டம் ஏற்பட்டு அதன் உரிமையாளர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்