Rock Fort Times
Online News

செல்போன் செயலி மூலம் போதைப்பொருள் விற்ற வழக்கில் மேலும் 2 போலீசார் கைது…!

சென்னையில் மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த மேலும் 2 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வடபழனியில் சிலர் மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் விற்பதாக சென்னை காவல் துறையின் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வடபழனி பகுதியில் போலீஸார் கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த கொளத்தூரை சேர்ந்த சுரேந்திரநாத் என்பவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அசோக்நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ஜேம்ஸ் என்பவரும் இவருடன் சேர்ந்து செல்போன் செயலி மூலம் போதைப் பொருள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேந்திரநாத், காவலர் ஜேம்ஸ் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், சென்னையில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் முதல்நிலைக் காவலர்கள் ஆனந்தன், சமீர் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீஸார் தனியாக அழைத்து விசாரித்தனர். விசாரணையில், இருவரும் தங்களுக்கு இருக்கும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் மூலம், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மெத்தம்பெட்டமைனை வாங்கி காவலர் ஜேம்ஸிடம் கொடுத்திருப்பதும், ஜேம்ஸும் சுரேந்திரநாத்தும் சேர்ந்து செல்போன் செயலி வாயிலாக அதை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் ஆனந்தனையும், சமீரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்