Rock Fort Times
Online News

திருச்சியில் வீடு புகுந்து திருடிய 2 சிறுவர்கள் !

திருச்சி, பாபு ரோடு குளத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகாமையில் உள்ள தியேட்டருக்கு சினிமா பார்ப்பதற்காக சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் வைத்திருந்த ரூ. 1500 பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.  இது குறித்து ஜெயபாலன் கோட்டை போலீசில் புகார் செய்தார்.அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேல அம்பிகாபுரம், கணேசபுரம், தாஜ் கடை தெரு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவர்கள் 2 பேர் வீடு புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது. அதை தொடர்ந்து ரெண்டு பேரையும் கைது செய்து அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்