Rock Fort Times
Online News

சமயபுரம் அருகே பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் பணம் கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை !

திருச்சி சமயபுரம் அருகேயுள்ள தெற்கு இருங்களூர் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.  வழக்கம் போல் கணவன் – மனைவி இருவரும் காலையில் வீட்டை பூட்டி விட்டு அவரவர் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் பாலசுப்ரமணியன் வீடு திரும்பினார். வீட்டில் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 30,000 ரொக்க பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பாலசுப்ரமணியன் சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.  இதில் இரண்டு பேரின் கைரேகை பதிவாகியுள்ளது.  பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்