Rock Fort Times
Online News

சொத்து தகராறில்  இளைஞர் அாிவாளால் வெட்டிக்கொலை…

இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி...

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே கணவாய்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் முருகேசன் (37), திருப்பூாில் அலுமினிய நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். முருகேசன் குடும்பத்தினருக்கும் அவரது பெரியப்பா ராஜா குடும்பத்தினருக்கும் சுமார் 4 ஏக்கர் விளைநிலங்களில் இருந்த சொத்து பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பூரில் இருந்து முருகேசன் தனது வீட்டுக்கு வந்துள்ளாா். நேற்று ( 10.12.2023 ) இரவு விளைநிலத்தில் மின்மோட்டார் போடுவதில் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது பழனியாண்டியின் இரண்டு மகன்கள் உட்பட மூன்று பேரை சகோதரர் ராஜாவின் மகன்கள் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. முருகேசன் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயாிழந்தார். மேலும் மற்றொரு மகன் உட்பட இரண்டு பேர் காயங்களுடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சென்ற புத்தாநத்தம் போலீஸார் முருகேசன் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா் . மேலும் தலைமறைவான பெரியப்பா, அவரது மூன்று மகன்களை போலீஸார் தேடி வருகின்றனா்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்