Rock Fort Times
Online News

முதல்வராக நாளை(மே 7) பதவி ஏற்கிறார் விஜய்…! நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 108 இடங்​களைக் கைப்​பற்​றி, தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​துள்ள தவெக, ஆட்சி அமைப்​ப​தற்​கான பணி​களில் தீவிர​மாக இறங்​கி​யுள்​ளது. இதுதொடர்​பாக சென்னை பனையூரில் உள்ள கட்​சித் தலைமை அலு​வல​கத்​தில், வெற்றி பெற்ற வேட்​பாளர்​களு​டன் கட்​சித் தலை​வர் விஜய் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். முன்னதாக, முதல்​வருக்கு இணை​யான பாது​காப்​புடன் அலு​வல​கம் வந்த விஜய்க்கு தொண்​டர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். பின்​னர், தவெக கொள்​கைத் தலை​வர்​களின் சிலைகளுக்கு அவர் மாலை அணி​வித்து மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். வெற்றி பெற்ற வேட்​பாளர்​களுக்கு வாழ்த்து தெரி​வித்​தார்.இதையடுத்து நடை​பெற்ற கூட்​டத்​தில், தவெக சட்​டப்​பேர​வைக் குழுத் தலை​வ​ராக விஜய் ஒரு​மன​தாகத் தேர்வு செய்​யப்​பட்​டார். இதற்​கான உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் அனைத்து வெற்றி வேட்​பாளர்​களும் கையெழுத்திட்​டனர். இதற்​கிடையே, ஆட்​சி​யமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகருக்கு விஜய் கடிதம் எழு​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக ஆளுநர் மாளி​கைக்கு மின்​னஞ்​சலில் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில், நாளை (மே 7) பதவி​யேற்க தயா​ராக உள்​ள​தாக​வும், 2 வார காலத்​துக்​குள் சட்​டப்​பேர​வை​யில் பெரும்​பான்​மையை நிரூபிப்​போம் என்​றும் அதில் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக ஆளுநரை இன்று சந்​திக்​க​வும் விஜய் திட்​ட​மிட்​டுள்​ளார். அப்​போது, ஆட்​சி​யமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார். ஆளுநர் அழைப்பு விடுக்​கும்​பட்​சத்​தில், முதல்​வ​ராக விஜய் நாளை பதவி​யேற்​பார் என்று கூறப்​படு​கிறது. அவருடன் அமைச்​சர்​களும் பதவி​யேற்க உள்​ளனர். பதவி​யேற்பு விழாவை சென்னை நேரு உள் விளை​யாட்டு அரங்​கில் பிரம்​மாண்​ட​மாக நடத்த ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன. இதையொட்டி, தவெக வெற்றி வேட்​பாளர்​கள் அனை​வரும் மாமல்​லபுரம் அரு​கில் உள்ள நட்​சத்​திர விடு​தி​யில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்