திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது . அவைத்தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது , கட்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது .
முடிவில் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது கூட்டத்தில் மாநகர செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், வண்ணை அரங்கநாதன், சபியுல்லா, கவிஞர் சல்மா, துணைமேயர் திவ்யா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு , குணசேகரன், பகுதி செயலாளர் மோகன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,மண்டல தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய, பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.